என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலை அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சாவல் பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்- அமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ராகுல் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு 35 பேர் பட்டா மாறுதல் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
அதில் 5 மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.
Next Story






