என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
பண்ருட்டியை சேர்ந்த என்ஜினீயர் கப்பலில் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த என்ஜினீயர் கப்பலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 27). மரைன் என்ஜினீயர். இவர் இந்திய அரசுக்கு சொந்தமான கப்பலில் வேலை பார்த்து வந்தார்.
இந்த கப்பல் அந்தமான் பகுதிக்கு சென்று உள்ளது. எனவே யாரும் இல்லாமல் சமயத்தில் அரவிந்த்குமார் கப்பலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பண்ருட்டியில் உள்ள அரவிந்த்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் பண்ருட்டி நகர்மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் பண்ருட்டி தாசில்தார் சிவா கார்த்திக்கேயனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அரவிந்த்குமார் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 27). மரைன் என்ஜினீயர். இவர் இந்திய அரசுக்கு சொந்தமான கப்பலில் வேலை பார்த்து வந்தார்.
இந்த கப்பல் அந்தமான் பகுதிக்கு சென்று உள்ளது. எனவே யாரும் இல்லாமல் சமயத்தில் அரவிந்த்குமார் கப்பலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பண்ருட்டியில் உள்ள அரவிந்த்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் பண்ருட்டி நகர்மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் பண்ருட்டி தாசில்தார் சிவா கார்த்திக்கேயனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அரவிந்த்குமார் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Next Story






