என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து மாற்றம்
பழைய மாமல்லபுரம் சாலையில் இரவு நேர போக்குவரத்து மாற்றம்
திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ரவுண்டான பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர்:
திருப்போரூர் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணி ரூ.42 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ரவுண்டான பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 24-ந்தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வரும் வாகனங்கள், இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை இள்ளலூர் இணைப்பு சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதை வழியாகச் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை, நகர எல்லையில் உள்ள சான்றோர் சாலை வழியாகச் சென்று தெற்கு மாட வீதி வழியாக ஓ.எம்.ஆர். சாலையில் இணைந்து, சென்னைக்குச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிப்பது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்றது.
இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி , பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுபதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பாலு, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், செங்கல்பட்டு மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஓ.எம்.ஆர். சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் அனைத்தும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் முடித்து நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பது. ஓரிரு மாதங்களில் புதிய சாலை அமைப்பது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக முடிப்பது, பணிகள் விடுபட்ட வார்டுகளில் திட்ட அறிக்கை தயார் செய்து புதிய டெண்டர் கோரப்பட்டு அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துக்குள் முடிப்பது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருப்போரூர் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணி ரூ.42 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ரவுண்டான பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 24-ந்தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வரும் வாகனங்கள், இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை இள்ளலூர் இணைப்பு சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதை வழியாகச் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை, நகர எல்லையில் உள்ள சான்றோர் சாலை வழியாகச் சென்று தெற்கு மாட வீதி வழியாக ஓ.எம்.ஆர். சாலையில் இணைந்து, சென்னைக்குச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிப்பது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்றது.
இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி , பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுபதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பாலு, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், செங்கல்பட்டு மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஓ.எம்.ஆர். சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் அனைத்தும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் முடித்து நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பது. ஓரிரு மாதங்களில் புதிய சாலை அமைப்பது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக முடிப்பது, பணிகள் விடுபட்ட வார்டுகளில் திட்ட அறிக்கை தயார் செய்து புதிய டெண்டர் கோரப்பட்டு அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துக்குள் முடிப்பது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
Next Story






