என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அரசு மகளிர் பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடைபெற்ற போது எடுத்த
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம்
கறம்பக்குடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
முகாமினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் தொடங்கி வைத்தார்.
முகாமில் உடல் இயக்க மருத்துவர் உமா மகேஷ்வரன், குழந்தைகள் நல மருத்துவர் நவீன்,காது, மூக்கு, தொண்டை மருத்து வர் கனகராஜ், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, கண் பரிசோதகர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு
மாற்றுத்திறனாளி குழந்தை களை பரிசோதனை செய்து அவர்களுக்கு உதவி உப கரணங்கள் அட்டை,பாது காப்பு பயணப்படி வழங்கவும், அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர்.
முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் அளவீட்டு முகாம் நடைபெற்று பின்னர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
முகாமில் கறம்பக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் கள் துரையரசன், துரைராஜ், பள்ளி தலைமையாசிரியர்கள் செல்வராஜ், பஞ்சர்வணம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாத்துரை, கறம்பக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் வட்டார வளமைய பயிற்றுநர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர்.
முகாமில் கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கறம்பக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
முகாமினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் தொடங்கி வைத்தார்.
முகாமில் உடல் இயக்க மருத்துவர் உமா மகேஷ்வரன், குழந்தைகள் நல மருத்துவர் நவீன்,காது, மூக்கு, தொண்டை மருத்து வர் கனகராஜ், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, கண் பரிசோதகர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு
மாற்றுத்திறனாளி குழந்தை களை பரிசோதனை செய்து அவர்களுக்கு உதவி உப கரணங்கள் அட்டை,பாது காப்பு பயணப்படி வழங்கவும், அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர்.
முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் அளவீட்டு முகாம் நடைபெற்று பின்னர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
முகாமில் கறம்பக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் கள் துரையரசன், துரைராஜ், பள்ளி தலைமையாசிரியர்கள் செல்வராஜ், பஞ்சர்வணம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாத்துரை, கறம்பக்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் வட்டார வளமைய பயிற்றுநர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர்.
முகாமில் கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story






