என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மஹராஜாகடை கிராமத்தில் 9 காட்டு யானைகள் முகாம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் மஹராஜாகடை கிராமத்தில் 9 காட்டு யானைககள் முகாமிட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த மஹராஜகடை கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் 9 யானைகள் முகாம் - பொதுமக்கள் வனப்பகுதிக்கு சொல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊடேதுர்க்கம், சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி, வேப்பனப்பள்ளி மற்றும் மகாராஜகடை ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதியில் 100&க்கும் மேற்பட்ட யானை உள்ளன. இந்த யானைகள் கோடை காலங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.

    அந்தவகையில் மகாராஜகடை கிராமம் அருகே உள்ள அங்கனாமலை வனப்பகுதியில் உள்ள துரை ஏரியில் குட்டியுடன் 9 யானைகள் முகாமிட்டு உள்ளது. 

    தமிழக&ஆந்திர மாநிலத்தை இணைக்ககூடிய இந்த வனப்பகுதியில் முகாமிட்டு உள்ள யானைகள் காட்டூர், பூங்கொர்த்தி, ஏக்கல்நத்தம் மற்றும் ஆந்திர மாநிலம் நடுமூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றது. 

    இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது.

    இந்த யானைகள் கூட்டம் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து யானைகளின் நடமாட் டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 9 யானைகள் வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் கால்நடை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×