என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கிருஷ்ணகிரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் தாளப்பட்டி கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story






