search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மணவாளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    மணவாளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 59). மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று காலை இவர் மரம் வெட்டும் தொழிலுக்கு செல்வதற்கு மணவாளக்குறிச்சி பீச் ரோட்டில் ஒரு  கடை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். 

    பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்தில் வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளை யாரோ? மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. 

    இது குறித்து  மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம ஆசாமியை  தேடி வருகின்றனர்.
    Next Story
    ×