என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்15 March 2022 9:22 AM GMT (Updated: 15 March 2022 9:22 AM GMT)
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் இன்று நடந்தது.
வேலூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் முக்கிய மானதும், பிரம்மாவுக்கு சாபவி மோசனம் அளித்த திருத்தலமானதுமான விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. அன்று மாலை விநாயகர் வீதிஉலா நடைபெற்றது.
தொடர்ந்து 9-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 10-ந்தேதி சந்திரசேகரர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 13-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இன்று காலை விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் நடந்தது.
2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால்பரவசம் அடைந்த பக்தர்கள் ஓம் நமசிவாய, அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தேர் திருவிழாவை யொட்டி விரிஞ்சிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X