என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கல்வித்துறை இயக்குனருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு
மகனை அரசு பள்ளியில் சேர்த்த கல்வித்துறை இயக்குனருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டியுள்ளார்
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து அரசு பள்ளியில் சேர்த்து வருவது மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற நடைமுறைகள் அரசு பள்ளிகள் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி அரசு அதிகாரிகள் உள்பட அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம். அதற்கான முதல்படியாகவே இதை கருதுகிறேன்.
கல்வித்துறை இயக்குனருக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






