என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருது விடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகளை இளைஞர்கள் கூட்டம் விரட்டும் காட்சி.
    X
    எருது விடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகளை இளைஞர்கள் கூட்டம் விரட்டும் காட்சி.

    எருது விடும் விழா சீறிப்பாய்ந்த காளைகள்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எருது விடும் விழா நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே அந்தேவணபள்ளி அடுத்துள்ள மல்லிகார்ஜூன ஸ்வாமி  கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் தேர் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் அதே போல் நேற்று முன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.தேர் திரு விழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெறும்.

    இதேபோல் இந்த  ஆண்டு நடந்த விழாவிற்கு தேன் கனிக் கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரி, கெல மங்கலம், பகுதிகளில் இருந்தும் மேலும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் விழாவிற்கு காளை கள் அழைத்து வரப்பட்டனர். காளையின் உரிமையாளர்கள் காளை களின் கொம்பு களுக்கு வர்ணம் தீட்டி அதன் மேல் வண்ண தட்டிகளை கட்டி வண்ணத் துணி களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

    அலங்கரிக்கப்பட்ட காளைகளின் கயிற்றினை அவிழ்த்து விட்டனர். கூட்டத்தில் நடுவில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முற்பட்டனர். சீறிபாய்ந்து சென்ற சில காளைகளின் தட்டி களை சில இளைஞர்கள் பறித்தனர். விழாவினை காண பல ஆயிரம் பேர் வந்திருந்தனர். இளைஞர்கள் நடுவில் சீறி பாய்ந்து சென்ற காளைகளை கண்டு இளைஞர்கள் ஆரவாரத்துடன் கை தட்டி ரசித் தனர் விழாவில் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கினர்.
    Next Story
    ×