என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

    வேலை வாங்கி தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் நாகசுதா(வயது 32). இவர் தற்காலிகமாக அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, 

    புதுக்கோட்டை சுப்பிரமணியன் நகரை சேர்ந்த சுப்பையா மகன் முருகனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் பலபேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளேன். அதே போல் உன்னுடைய தற்காலிக வேலையை நிரந்தர அரசு வேலையாக மாற்றி வாங்கி தருகிறேன் என்றும் அதற்கு செலவிற்கு ரூ.11 லட்சம் வேண்டும் என்று நாகசுதாவிடம், முருகன் கூறியுள்ளார்.

    இதனை நம்பி நாகசுதா பணத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால்  இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகசுதா, புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரெண்டை நேரில் சந்தித்து புகார் செய்துள்ளார். 

    அதன்பேரில் புதுக்கோட்டை நகர நிலைய போலீசார் முருகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முருகன் ஏற்கனவே மயிலாடுதுறையில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் தற்போது மயிலாடுதுறை போலீசார் முருகனை கைது செய்துள்ளனர். முருகனை தங்களது கஸ்டடியில் எடுக்க புதுக்கோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×