என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் புனரமைக்கப்பட்ட நூலக கட்டிட திறப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
அரசு பள்ளியில் நூலகம் திறப்பு
கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 95- 96ம் ஆண்டில் மேல்நிலை வகுப்பில் படித்த 41 மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளியின் நூலக கட்டிடத்தை சீரமைத்தும், மேஜை, நாற்காலிகள் மற்றும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பள்ளியின் நூலக கட்டிடத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் முன்னாள் மாணவ, மாணவிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
Next Story






