என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் பேசிய போது எடுத்த படம்.
    X
    ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் பேசிய போது எடுத்த படம்.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கல்குவாரி வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கல்குவாரி வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் அறிவுரை வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.பவன் குமார் தூசி போலீஸ் நிலையத்தில் சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தொழிற் சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது குறித்தும், அரசு வகுத்துள்ள விதிமுறை களின்படி குவாரிகளை நடத்த வேண்டும் என்பது குறித்தும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடினார்.

    அப்போது தூசி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி -காஞ்சிபுரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே குவாரி வாகனங்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் செல்லக் கூடாது என்றும், லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்றும், தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும். 

    மாமுல் கொடுக்க வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், கல்குவாரியினர் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் தூசி போலீஸ் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத் தினார்.
    Next Story
    ×