என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடியில் விளையாட்டு மைதான திறப்பு விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
    X
    காட்பாடியில் விளையாட்டு மைதான திறப்பு விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

    காட்பாடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறப்பு

    காட்பாடியில் நீச்சல் குளம், தடகள போட்டிகள் நடத்தும் வசதியுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. 

    வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 1975-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நேதாஜி ஸ்டேடியம் மாவட்ட விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்தது.

    அதுவும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆயுதப்படை மைதானமாக பயன்பாட்டில் உள்ளது. இதனால் விளையாட்டு மைதானம் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் விளங்கியது.

    இதனால் விளையாட்டு வீரர்கள், பல்வேறு போட்டி களில் தங்களது திறமையை வெளிக்காட்டமுடியாமல் தவித்து வந்தனர்.

    மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விளையாட்டு வீரர்கள் மத்தியில் எழுந்தது. 

    இதையடுத்து வேலூரில் காட்பாடி, ஓட்டேரி, விருதம்பட்டு ஆகிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு சில காரணங் களுக்காக கைவிடப்பட்டது. 

    இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து வேலூர் அடுத்த ஊசூரில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டது. 

    அதற்கேற்ப ஊசூரில் விளையாட்டு மைதானம் அமைவதற்கான அரசாணையும் வெளியானது. அதற்காக ரூ.16.45 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், விளையாட்டு மைதானத் திற்கான கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில், காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இறுதிமுடிவு செய்தனர்.  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

    இதற்காக ஏற்கனவே வெளியான அரசாணை ரத்து செய்யப்பட்டதுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.16.45 கோடி நிதியில் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்த மான 36.68 ஏக்கர் நிலத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத் திற்கான கட்டுமான பணிகள் தொடங்கின.

    கடந்த ஆண்டு இந்த விளையாட்டும் மைதானத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.19 கோடியே 24 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    இந்த விளையாட்டு மைதானத்தில் 46 ஆயிரத்து 737 சதுர அடியில் பார்வையாளர் மாடம் மற்றும் நிர்வாக அலுவலகம் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    நிர்வாக அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அலுவலகம் உடற்பயிற்சி அறை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் அறை, சமையல் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் 1500 பேர் அமரக்கூடிய மேற்கூரையுடன் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்று திறனாளிகளுக்கு தனி இட வசதி உள்ளது.

    கூடைபந்து, ஹாக்கி, கோ, கோ, கபடி, இறகுபந்து, நீச்சல்குளம், கால்பந்து, 400 மீட்டர் தடகள பாதை, அதோடு இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இதர வசதிகளாக பார்க்கிங் வசதி இணைப்புச் சாலை கழிவறை வசதிகளும் உள்ளன. பல்நோக்கு விளையாட்டு வளாகமாக இந்த மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. 

    தமிழகத்தில் பெரிய விளையாட்டு மைதானங் களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

    இந்த விளையாட்டு மைதானத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    காட்பாடியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி மைதானத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×