search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்வுக்கான சான்றுகளை பயனாளிக்கு நீதிபதிகள் வழங்கினர்.
    X
    மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்வுக்கான சான்றுகளை பயனாளிக்கு நீதிபதிகள் வழங்கினர்.

    லோக் அதாலத் மூலம் 366 வழக்குகளில் தீர்வு

    மயிலாடுதுறையில் லோக் அதாலத் மூலம் 366 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 

    வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஸ்வானாபர்வின், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

    60&க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொண்டதில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 21 வழக்குகளும், கூடுதல் துணை நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றத்தில் 4 வழக்குகள், முன்சிப் கோர்ட்டில் 2 வழக்குகள் என சாலை விபத்து நஷ்டஈடு, குடும்ப விவாகரத்து வழக்குகள், காசோலை வழக்குகள் என மொத்தம் 37 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலம் ஒரு கோடியே 69 லட்சத்து 77 ஆயிரத்து 651 ரூபாய்க்கு தீர்வுகாணப்பட்டதாகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி அமிர்தம் தலைமையில் 164 வழக்குகளுக்கு தீர்வு கானப்பட்டு 63 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நீதிபதி அப்துல்கனி தலைமையில் 158 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு 25 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மாயூரம் வக்கீல்கள் சங்கத் தலைவர் விதிவிடங்கன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாயூரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 வழக்கறிஞர் சங்கத்தினரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்திருந்த நிலையில், லோக் அதாலத் வழக்கு விசாரணைக்கான வழக்காடிகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் நன்றி கூறினார்.
    Next Story
    ×