என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலை சமாளிக்க விலங்குகளுக்கு பல்வேறு ஏற்பாடுகள்
Byமாலை மலர்12 March 2022 11:21 AM GMT (Updated: 12 March 2022 11:21 AM GMT)
யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்கு வகைகள் இளநீரும் கொடுக்கப்படுகிறது.
தாம்பரம்:
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட விலங்குகள் ஊர்வன பறப்பன உள்ளன.
தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முக்கிய விலங்குகளான யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல் மற்றும் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிம்பான்சி குரங்குகளுக்காக அதன் வளாகத்தில் ஷவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பறவை இனங்களுக்கு அதன் கூண்டுகளை சுற்றிசாக்கு கோனி மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது
சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவை வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது
உள்ளரங்கில் காணக்கூடிய ஊர்வன விலங்குகளுக்கு வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் தரையில் தண்ணீர் தெளிக்கப்பட்டும் மரக்கிளைகள் மர போலந்து போன்றவை செயற்கை முறையில் உள்ளே அமைத்துள்ளனர். இதன்மூலம் வெளியிலிருந்து ஊர்வன விலங்குகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்றவற்றுக்கு ஐஸ் கட்டியாக உறைய வைத்த மாமிச உணவுகள் வெயிலை முன்னிட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதன் கூண்டுக்குள் வைத்து தண்ணீர் பீச்சி அடித்து இருவேளை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள குளிப்பாட்டி வருகின்றனர்.
இதுபோல் அனைத்து விலங்குகளுக்கும் அதன் வாழிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்கு வகைகள் இளநீரும் கொடுக்கப்படுகிறது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட விலங்குகள் ஊர்வன பறப்பன உள்ளன.
தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முக்கிய விலங்குகளான யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல் மற்றும் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிம்பான்சி குரங்குகளுக்காக அதன் வளாகத்தில் ஷவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பறவை இனங்களுக்கு அதன் கூண்டுகளை சுற்றிசாக்கு கோனி மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது
சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவை வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது
உள்ளரங்கில் காணக்கூடிய ஊர்வன விலங்குகளுக்கு வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் தரையில் தண்ணீர் தெளிக்கப்பட்டும் மரக்கிளைகள் மர போலந்து போன்றவை செயற்கை முறையில் உள்ளே அமைத்துள்ளனர். இதன்மூலம் வெளியிலிருந்து ஊர்வன விலங்குகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்றவற்றுக்கு ஐஸ் கட்டியாக உறைய வைத்த மாமிச உணவுகள் வெயிலை முன்னிட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதன் கூண்டுக்குள் வைத்து தண்ணீர் பீச்சி அடித்து இருவேளை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள குளிப்பாட்டி வருகின்றனர்.
இதுபோல் அனைத்து விலங்குகளுக்கும் அதன் வாழிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்கு வகைகள் இளநீரும் கொடுக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X