search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

    போலீசார் மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள வரதராஜூலு நகரை சேர்ந்தவர் தனபிரபு (வயது 30). இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 9&ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வால்பாறையில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். 

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். 

    நேற்று வீட்டிற்கு திரும்பிய தனபிரபு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 

    இது குறித்து தனபிரபு சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×