என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
சிதம்பரம் அருகே விபத்தில் 2 பேர் பலி
சிதம்பரம் அருகே அரசு பஸ் மற்றும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கண்டரக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரவதனம். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 20). கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்று வரும் பாக்கியராஜ் நேற்று மாலை பரங்கிபேட்டை ரெயில் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் ராகுல் (வயது 24) என்பவர் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.
Next Story






