என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இழப்பீட்டுத் தொகை வழங்கிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தவிழா.
    X
    இழப்பீட்டுத் தொகை வழங்கிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தவிழா.

    வேலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ.3.91 கோடி நில இழப்பீடு தொகை

    வேலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ.3.91 கோடி நில இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இதில் விபத்து இழப்பீடு, நில இழப்பீடு வழக்குகள் என 11 கோர்ட்டுகளில் 6 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தா லீலா தலைமை தாங்கினார். 

    ஆற்காடு அடுத்த காவனூரை சேர்ந்த இளவழகன் ஆட்டோ மோதி காயம் அடைந்தார். அவருக்கு இழப்பீடு தொகையாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா வழங்கினார். 

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் அருகே போலீஸ் குடியிருப்பு அமைப்பதற்கும், ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும் சுமார் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

    நிலத்தின் உரிமையாளர் களுக்கு உரிய தொகை வழங்கவில்லை என 100-க்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு வழக்கில் ரூ.3.91 கோடி இழப்பீட்டுத் தொகை இன்று வழங்கப்பட்டது.
    Next Story
    ×