என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மோட்டார் சைக்கிள் மாயம்

    வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆண்ரூஸ் செல்வின் (வயது 21). இவர் கடந்த 8-ந் தேதியன்று விராலிமலையில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். 

    மோட்டார் சைக்கிளை தனது பெரியம்மா வீட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆண்ரூஸ்செல்வின் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். 

    எங்கு தேடியும் கிடைக்காததால் அவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×