என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

    திருக்கனூர் அருகே கஞ்சாவிற்ற 4பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே சுத்துக்கேணி ஏரிக்கரை பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கும் கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக காட்டேரிக் குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து விசாரனை நடத்தினர். அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.  அவர்கள் மொத்தம் 500கிராம் கஞ்சா வைத்திருந்தனர்.  இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர் பாடியை சேர்ந்த சஞ்சய் (வயது28) அஜித் குமார்(22) சுத்துக்கேணி அம்பேத்கார் வீதியை சேர்ந்த அருள்(22) மற்றும் சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குறலரசன்(22) என்பதும் இவர்கள் குறிப்பாக கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  கஞ்சா 2மோட்டார் சைக்கிள் 2செல்போன் மற்றும் கஞ்சா விற்பனை பணம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அவர்கள் எங்கிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்தார்கள் என்பது குறித்தும், இதன் பின்னணியில் யார், யார்?  உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×