என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூல்களை வாசித்த மகளிரை கவுரவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.
நூலகம் வந்த பெண்களுக்கு பாராட்டு
நூலகம் வந்த பெண்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சர்வதேச மகளிர்தினத்தன்று வருகை தந்து நூல்களை வாசித்த பெண்களை கவுரவித்து பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.
காலை முதலே நூலகத்திற்கு வந்த பெண்களை வரவேற்று வாசகர் வட்ட தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மையத்தின் நூலகர் சசிகலா, நூலகர் கண்ணன், மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், ரோட்டரி துணை ஆளுநர் கருணாகரன், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் துரை மணி ஆகியோரும் கலந்து கொண்டு மகளிருக்கு பாராட் டுதல்களை தெரிவித்தனர்.
வாசகர் வட்டம் சார்பில் நூலக அலுவலக பணியாளர் களான பெண்கள் அனைவரும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த பாராட்டு விழா தங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதாக பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.
Next Story






