என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த கிளீனர் சாவு
பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த கிளீனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பைங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). இவர், பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேனில் கிளீனராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரம்பக்காடு கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு சென்ற போது, ஒரு வளைவில் வேன் திரும்பிய போது, முருகேசன் வேனில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாய மடைந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித் து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






