என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது
புதுக்கோட்டையில் குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்மையில் அஜித் குமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், காமராஜபுரத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (25), ஆகாஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமயம் காவல் நிலைய எல்லையில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்திருந்தார்.
அதன்படி, மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மூவரும், புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






