என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிகழ்ச்சி நடந்தது.
    X
    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிகழ்ச்சி நடந்தது.

    நியூயார்க் நிறுவனத்துடன் எம்.ஐ.டி.கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், சபயர் நியூயார்க் நிறுவன பிரதிநிதி பிரியதர்ஷினி, வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை  கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) சபயர்  நியூயார்க்  நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு  பரிமாற்றம் செய்து கொண்டது. 

    சபயர் நியூயார்க்   நிறுவனம்,  அமெரிக்காவின் நியூயார்க் நகரை  தலைமையிடமாக கொண்டு செயல்படும்  அனைத்து  வீடியோ நிபுணத்துவ நெட்வொர்க்கிங் பிளாட்பார்ம்  வாய்ப்பு களுடன் மக்களை இணைக்கும் ஒரு  நிறுவனம் ஆகும். 

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்  தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி  கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி  ஜெயக்குமார்   முன்னிலையில்,  எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும்   சபயர்  நியூயார்க்  நிறுவன பிரதிநிதி பிரியதர்ஷினி ஆகியோர்  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    Next Story
    ×