என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்பந்து போட்டி
கேத்தி அருகே ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி கால்பந்து போட்டி
விளையாட்டு வீரர்கள் பிரார்த்தனை
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கேத்தி அருகே உள்ள சி.எஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ரஷ்யா& உக்ரைன் போர் நின்று இரு நாடுகள் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என சீன பாதிரியார் ஆர்தர் பெயரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது. ஒவ்வொரு போட்டி களுக்கு முன்பும் ரஷ்ய -உக்ரைன் போர் சமாதான மாக முடிய சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது.
இந்த போட்டிகள் பற்றி கல்லூரி தாளாளர் நேச மெர்லின் கூறுகையில், உக்ரைன் -& ரஷ்யா இடையே நடந்து வரும் போரானது நின்று சமாதானம் நிலவ வேண்டி போட்டிகள் நடைபெற்றது. மின்னொளியில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உற்சாகமாக விளையாடியதாக தெரிவித்தார்.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜோஷ்வா ஞானசேகர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இறுதி போட்டியில் நீலகிரி பைசன் அணியும், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி அணியும் மோதிய போட்டியில் நீலகிரி பைசன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டதை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பையும். பரிசு தொகையையும் தாளாளர் நேசமெர்லின் வழங்கினார்.
Next Story






