என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பி.வி.சி.குழாய்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    பி.வி.சி.குழாய்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பி.வி.சி.குழாய் வாங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.15000 மானியமும் மற்றும் மின் மோட்டார் வாங்குவதற்கு ரூ.10000 மானியமும் வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும், விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், புலப்பட வரைபடம், அங்கீகரிக் கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகிய ஆவணகளுடன் http://application.tahdco.com  என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.

    மேலும் தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டத்தில் பயனடைந்தவர்களும் மற்றும் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

    மேலும் விபரங்களுக்கு “ மாவட்ட மேலாளர், தாட்கோ, நெ.153 / 1, கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூர் 632 002. செல்: 9445029483 தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×