என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
பெரம்பலூரில் சிறப்பு கிராமசபை கூட்டம்
பெரம்பலூர் செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம கிராமசபை கூட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சந்திரா தலைமை வகித்தார். பெரம்பலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா முன்னிலை வகித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட சமூக தணிக்கை குழுவினர் 2019&2020 ம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தணிக்கை குறித்த விவரங்களை விவாதிக்கும் அதன் பொருட்டு ஊராட்சி செயலளர் கோவிந்தன் பதிலளித்தார்.
மேலும் 100 வேலை திட்ட பணியாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வரும் 2022&2023 நிதியாண்டில் வேலை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும், அனைத்து குடும்பத்திற்கும் 100 வேலை நாட்கள் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும்,
100 நாட்கள் வேலை திட்ட பணியாட்கள்பெருமாள் மலை குட்டைகளில் தண்ணீர் கொண்டு வருவதில்சிரமம் ஏற்பட்டுள்ளதால் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து செங்குணம் பெருமாள் மலை அடிவாரத்தில் வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி துணை தலைவர் மணிவேல், வார்டு உறுப்பினர்கள் நல்லம்மாள், அனிதா, ராஜ கண்ணு, நிர்மலா அஞ்சலை, சுசிலா, சுப்ரமணி, திரு மூர்த்தி மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் அம்மு, சிநேகா, பூவழகி, சாரதாதேவி மற்றும் குமார் அய்யாவு உட்பட பொதுமக்ள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சந்திரா தலைமை வகித்தார். பெரம்பலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா முன்னிலை வகித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட சமூக தணிக்கை குழுவினர் 2019&2020 ம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தணிக்கை குறித்த விவரங்களை விவாதிக்கும் அதன் பொருட்டு ஊராட்சி செயலளர் கோவிந்தன் பதிலளித்தார்.
மேலும் 100 வேலை திட்ட பணியாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வரும் 2022&2023 நிதியாண்டில் வேலை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும், அனைத்து குடும்பத்திற்கும் 100 வேலை நாட்கள் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும்,
100 நாட்கள் வேலை திட்ட பணியாட்கள்பெருமாள் மலை குட்டைகளில் தண்ணீர் கொண்டு வருவதில்சிரமம் ஏற்பட்டுள்ளதால் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து செங்குணம் பெருமாள் மலை அடிவாரத்தில் வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி துணை தலைவர் மணிவேல், வார்டு உறுப்பினர்கள் நல்லம்மாள், அனிதா, ராஜ கண்ணு, நிர்மலா அஞ்சலை, சுசிலா, சுப்ரமணி, திரு மூர்த்தி மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் அம்மு, சிநேகா, பூவழகி, சாரதாதேவி மற்றும் குமார் அய்யாவு உட்பட பொதுமக்ள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






