என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
கடலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவரது மனைவி சேர்ந்து வாழாமல் இருந்து வந்ததால் கடந்த சில வருடங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். எனவே முருகன் கடலூர் அருகே எஸ்.புதூர் சேர்ந்த உறவினர் அருள் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்குள்ளவர்களிடம் வழக்கம்போல் முருகன் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் திடீரென்று மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து முருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவரது மனைவி சேர்ந்து வாழாமல் இருந்து வந்ததால் கடந்த சில வருடங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். எனவே முருகன் கடலூர் அருகே எஸ்.புதூர் சேர்ந்த உறவினர் அருள் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்குள்ளவர்களிடம் வழக்கம்போல் முருகன் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் திடீரென்று மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து முருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






