என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பிளஸ்-2 மாணவி மாயம்
கிருஷ்ணகிரியில் மாயமான பிளஸ்&2 மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பா ரோட்டை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 1-ந் தேதி வீட்டை விட்டு சென்ற மாணவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.
இதுபற்றி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாகமணி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.
Next Story






