என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் போது எடுத்த படம்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலங்கள் அளவீடு செய்து கல் நடும் பணி
ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்து கல் நடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை சார்பில் கோவில் இடங்களை அளவு செய்து எல்லை கல் நடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வாராஜ், தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பணி,
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலாவதாக செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவு செய்து எல்லைகள் நடும் பணி நடைபெற்றது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் 1820 கோவில்கள் உள்ளன. இதில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதனை அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செட்டிகுளம் ஏகாம்பஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்களை கண்டு அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளோம். முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை சார்பில் கோவில் இடங்களை அளவு செய்து எல்லை கல் நடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வாராஜ், தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பணி,
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலாவதாக செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவு செய்து எல்லைகள் நடும் பணி நடைபெற்றது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் 1820 கோவில்கள் உள்ளன. இதில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதனை அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செட்டிகுளம் ஏகாம்பஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்களை கண்டு அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளோம். முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






