என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருடிய விற்பனையாளர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருடிய விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம், அருள்ராஜ், சரவணன், மாரிமுத்து ஆகியோர் விற்பனையாளராகவும், விண்ணப்பள்ளியை சேர்ந்த சந்திரன் என்பவர் மேற்பார்வையாளராகவும் வேலைப்பார்த்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் பணியில் இருந்தார். பின்னர் இரவு வேலை நேரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மறுநாள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுப்பற்றி விற்பனையாளர் சண்முகம் கடத்தூர்போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு கோபி டி.எஸ்.பி.ஆறுமுகம் மற்றும் கடத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருப்புகளை ஆய்வுசெய்த போது 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.கேமிராக்கள் மற்றும் வயர்கள் அறுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடையின் விற்பனையாளர் சண்முகம் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி சென்றதும், பின்னர் நள்ளிரவில் விற்பனையாளர் சண்முகம் மற்றொரு நபருடன் வந்து மதுக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் விற்பனையாளர் சண்முகத்தை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த மற்றொரு நபரையும் தேடிவருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம், அருள்ராஜ், சரவணன், மாரிமுத்து ஆகியோர் விற்பனையாளராகவும், விண்ணப்பள்ளியை சேர்ந்த சந்திரன் என்பவர் மேற்பார்வையாளராகவும் வேலைப்பார்த்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் பணியில் இருந்தார். பின்னர் இரவு வேலை நேரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மறுநாள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுப்பற்றி விற்பனையாளர் சண்முகம் கடத்தூர்போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு கோபி டி.எஸ்.பி.ஆறுமுகம் மற்றும் கடத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருப்புகளை ஆய்வுசெய்த போது 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.கேமிராக்கள் மற்றும் வயர்கள் அறுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடையின் விற்பனையாளர் சண்முகம் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி சென்றதும், பின்னர் நள்ளிரவில் விற்பனையாளர் சண்முகம் மற்றொரு நபருடன் வந்து மதுக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் விற்பனையாளர் சண்முகத்தை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த மற்றொரு நபரையும் தேடிவருகிறார்கள்.
Next Story






