என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை&பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதிக்குட்பட்ட ஏ.வி.எஸ்.லே-அவுட்டில் வசித்து வருபவர் சுடேஷ் (வயது37). இவர் முனிபோயம்தொட்டியில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் 7-ந்தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மல்லசந்திரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் நெக்லஸ், தோடு, வளையல், மோதிரம் உட்பட 6 பவுன் தங்க நகைகள், ரூபாய் 50 ஆயிரம் காணவில்லை. மேலும் விலை உயர்ந்த டி.வி.யும் திருடி விட்டு சென்றுள்ளனர்.
ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து சுடேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. அதில் 2 கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






