என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர்-வாலாஜாவில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
வேலூர்-வாலாஜாவில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேலூர்:
வேலூர் கண்டோன் மெண்ட் பென்னாத்தூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார்.
அவர் யார் என்பது தெரியவில்லை. தண்டவாளத்தை குறுக்கே கடந்தபோது திருப்பதி மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு தலையின் பின்புறம் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.
இறந்தவர் வெள்ளை நிற வேட்டியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். இதேபோல் வாலாஜா - முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு இடையே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலைய தொலைபேசி எண் 9498101961 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story






