என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிழா நடைபெற்ற காட்சி
    X
    திருவிழா நடைபெற்ற காட்சி

    அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா

    அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    கடந்த வாரம் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மண்ணடித் திடலில் ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரியகுளத்தில் விட்டனர்.

    திருவிழாவின் தொடர்ச்சியாக மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில் அருகே ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு குதிரை எடுப்புத் திருவிழா நேற்று நடந்தது.

    அதாவது வீரமாகாளி அம்மன் கோவில் காப்புக்கட்டியவுடன் மேற்பனைக் காடு கிராம மக்கள் இணைந்து செரியலூரில் உள்ள மண்பாண்ட கலை ஞர்களிடம் அய்யனார் கோவிலுக்கு களி மண் குதிரை, காளை, சுவாமி சிலைகள், பரிவார தெய்வங்கள் என சிலைகள் செய்ய கொடுத்திருந்தனர்.

    மேற்பனைக்காடு கிராமத்தில் மக்கள் ஏராளமானோர் தாரை, தப்பட்டைகள் உடன் செரியலூர் வந்து குதிரை மற்றும் சுவாமி சிலைகளை தூக்கிச் சென்றனர். சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்று அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

    பின்னர் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொ ண்டனர்.தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மது எடுப்பு திருவிழா நடைபெறுகிறது.
    Next Story
    ×