search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா சிவராத்திரி விழாவையொட்டி காத்தாயி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    மகா சிவராத்திரி விழாவையொட்டி காத்தாயி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    பச்சையம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா

    பச்சையம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள மன்னார் ஈஸ்வரன்- பச்சையம்மன் கோவிலில்  காத்தாயி அம்மன், பூமுனி, வேதமுனி, செம்முனி, ராயமுனி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இதையடுத்து பச்சையம்மன் கோவிலை சுற்றிலும் காத்தாயி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் நாட்டார் மங்கலம், ஈச்சங்காடு, மருதடி, இரூர், ஆலத்தூர்கேட், செட்டிகுளம், கூத்தனூர், சீதேவிமங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார் மங்கலம் கிராம மக்கள், குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×