என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    காவலாளியிடம் தங்க செயின்பறித்த வாலிபர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காவலாளியிடம், கத்திமுனையில் தங்க செயினை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 44) இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை பணியை முடித்துக்கொண்டு ரிங்ரோடு வழியாக சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி செல்வகுமார் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடிவிட்டார். 

    இது குறித்து, ஓசூர் சிப்காட் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். அதன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மத்திகிரியை சேர்ந்த முரளி (19) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×