என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 9-ந்தேதி ஏலம்
வேலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 9-ந்தேதி ஏலம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் மற்றும் 3 சக்கர வாகனங்கள் வரும் 9-ந்தேதி காலை 9 மணி முதல் வேலூர் மாவட்ட ஆயுதப்படை நேதாஜி மைதானத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.
மேலும் , வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் 100 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏல தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீதமும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும்.
மேலும் குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட வாகனங்கள் அனைத்துக்கும் 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்படும் .
ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீதே அந்த வாகனத் தின் உரிமை ஆவணமாகும் என எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story






