என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆலங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்.

    ஆலங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம்

    ஆலங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புதமாதா நடுநிலைப்பள்ளி மற்றும் கடைவீதியில் உள்ள  தொடக்கப் பள்ளியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர். 

    முகாமிற்கு ஆலங்குடி பேரூராட்சி  தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வள் ளியம்மை  கேபிகேடி தங்க மணி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், 

    ஆலங்குடி சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ், சுகாதார செவிலியர் பிரேமா பேரூராட்சி  துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    Next Story
    ×