என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் பிறப்பு இறப்பு சிறப்பு பதிவு முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்
கந்தர்வக்கோட்டையில் பிறப்பு இறப்பு பதிவு சிறப்பு முகாம்
கந்தர்வக்கோட்டையில் பிறப்பு இறப்பு பதிவு சிறப்பு முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் தலைமை தாங்கினார். முகாமில் கந்தர்வகோட்டை தாலுக்காவில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகளை நேரில் விசாரணை செய்து உடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






