search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குழித்துறை அருகே கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியருக்கு சரமாரி அடி-உதை

    குழித்துறை அருகே கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தை அடுத்த நல்லூர், காரவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 26). இவர் கியாஸ் கம்பெனியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காரவிளை பகுதியில் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

    அப்போது கசவன் விளையை சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யுமாறு கேட்டார். அதற்கு விஜின் இப்போது கியாஸ் சப்ளை செய்ய முடியாதென கூறியுள்ளார்.  இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அப்பகு தியை சேர்ந்த விஜயகுமார் (வயது 60)  மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் சேர்ந்து, கியாஸ் கம்பெனி ஊழியர் விஜினை தகாத வார்த்தைகள் பேசி, சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த விஜின், சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விஜினை தாக்கியதாக விஜயகுமார் மற்றும் அவரது மகன்கள் உள்பட  4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×