என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழித்துறை அருகே கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியருக்கு சரமாரி அடி-உதை
Byமாலை மலர்6 March 2022 7:50 AM GMT (Updated: 6 March 2022 7:50 AM GMT)
குழித்துறை அருகே கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டத்தை அடுத்த நல்லூர், காரவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 26). இவர் கியாஸ் கம்பெனியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காரவிளை பகுதியில் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கசவன் விளையை சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யுமாறு கேட்டார். அதற்கு விஜின் இப்போது கியாஸ் சப்ளை செய்ய முடியாதென கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகு தியை சேர்ந்த விஜயகுமார் (வயது 60) மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் சேர்ந்து, கியாஸ் கம்பெனி ஊழியர் விஜினை தகாத வார்த்தைகள் பேசி, சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த விஜின், சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விஜினை தாக்கியதாக விஜயகுமார் மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X