என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பு
    X
    டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பு

    டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

    ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் வீடுவீடாக டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம், அம்பேத்கர் தெரு, ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலால் அறிகுறி தென்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து அப்பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் சுற்றி பழைய பொருட்கள் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுற்றி கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர் சிவப்பிரகாசம் ஊராட்சி செயலர் சோழராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கொண்ட குழுவினர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு புகை இயந்திரம் மூலம் கொசு மருந்து அடித்தனர்.இதனால் அப்பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பதற்கு முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×