என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
2 வீடுகளில் துணிகர கொள்ளை
தேவகோட்டையில் 2 வீடுகளில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா சாலை வடக்கு வீதியில் வசிப்பவர் அருள்தாஸ் (வயது 55). இவரது மனைவி சகாயராணி. இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிரதீப் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்
இவரை பார்ப்பதற்காக அருள்தாஸ் சகாயராணி இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார். இன்று காலை சகாயராணி வீட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அருள்தாஸ் உறவினர்கள் சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசுகள் எல்.இ.டி. டிவி திருடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கொள்ளை நடத்த வீட்டின் அருகே வசிப்பவர் கோவிந்தசாமி (70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் குமரேசன் சிங்கப்பூரிலும், இரண்டாவது மகன் தமிழ் வாகனன் பெங்களூருவில் மெட்டல் தொழில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவிந்தசாமி பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை தடவியல் நிபுணர் குழுவினர் 2 வீடுகளிலும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
தேவகோட்டை நகரில் அண்ணா சாலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Next Story






