என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.
    X
    ஆக்கிரமிப்பு வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.

    வேலூரில் குடிசை வீட்டை அகற்ற முயன்றதால் சாலை மறியல்

    வேலூரில் குடிசை வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் பள்ளிபாளையம் கே.கே. நகரை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் அருகே உள்ள குடிசை வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் இன்று குடிசை வீட்டை அகற்ற சென்றனர். அவர்களிடம் வீட்டின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் உட்பட பலர் வேலூர் பெங்களூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

    வீட்டை இடித்து அப்புறப்படுத்த கூடாது என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×