என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்டையார்பேட்டையில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Byமாலை மலர்5 March 2022 7:52 AM GMT (Updated: 5 March 2022 7:52 AM GMT)
திருமணம் நடைபெறததால் மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டார் மீது தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
ராயபுரம்:
அம்பத்தூரை சேர்ந்த வாலிபருக்கும் தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தண்டையார்பேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் தாலி கட்டும் போது கடைசி நிமிடத்தில் மணப்பெண் மயங்கி விழுந்தார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் மயக்கம் தெளிந்து விசாரித்தபோது அந்தப் பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டார் மீது தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் திருமணம் முடிந்த பின்னர் அம்பத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு செலவான பணத்தினை பெற்றுத்தருமாறு தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X