search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவராக சுதா முருகன் போட்டியின்றி தேர்வு

    சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவராக சுதா முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணா மலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இன்றுகாலை நடந்தது இதில் சேத்துபட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

    இதில் சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் திமுக 10 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் அதிமுக 2 இடங்களிலும் சுயேட்சைகள் 4 இடங்களில் பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றன இதில் 3&வது வார்டு திமுக உறுப்பினர் எம்.சுதா முருகன் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யா ததால் போட்டியின்றி ஒருமனதாக சேத்துபட்டு பேரூராட்சி மன்றத் தலைவராக எம்.சுதா முருகன் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

     இவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணி, சூசை ஜெயராஜ், ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தது தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.
    Next Story
    ×