என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தண்ணீர் தொட்டியில் விழுந்து பெயிண்டர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து பெயிண்டர் பலியானார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பளளி அருகே உள்ள தேவீரஹள்ளியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37).பெயிண்டர்.
இவர் ஓசூர் கதிரேப்பள்ளியில் தண்ணீர் தொட்டிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சிலம்பரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிலம்பரசன் இறந்தார்.
இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






