என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி தலைவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19&ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. 24 இடங்களையும், அ.தி.மு.க. 8 இடங்களையும்,
அ.ம.மு.க. மற்றும் விஜய் மக்கள் யக்கம் தலா ஒரு இடங்களையும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கவுன்சிலராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் 25-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் திலகவதி புதுக்கோட்டை நகராட்சி தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதே போல் அறந்தாங்கி நகராட்சி தலைவராக தி.மு.க.வேட்பாளர் ஆனந்த் பதவியேற்றுக்கொண்டார்.
இதே போல் பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக 10-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுந்தரி அழகப்பன் பதவியேற்றுக்கொண்டார்.
கறம்பக்குடி பேரூராட்சி தலைவராக, 8-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் முருகேசன் பதவியேற்றுக் கொண்டார். ஆலங்குடி பேரூராட்சி தலைவராக, 13-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ராசி பதவியேற்றுக் கொண்டார். கீரமங்கலம் பேரூராட்சி தலைவராக, 2&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
இலுப்பூர் பேரூராட்சி தலைவராக, 14-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் சகுந்தலா பதவியேற்றுக் கொண்டார். கீரனூர் பேரூராட்சி தலைவராக, 1-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ஜெயமீரா பதவியேற்றுக் கொண்டார்.
அன்னவாசல் பேரூராட்சி தலைவராக, 1-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர் சாலை பொன்னம்மாள் பதவியேற்றுக் கொண்டார். அரிமளம் பேரூராட்சி தலைவராக, 13&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் மாரிக்கண்ணு பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19&ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. 24 இடங்களையும், அ.தி.மு.க. 8 இடங்களையும்,
அ.ம.மு.க. மற்றும் விஜய் மக்கள் யக்கம் தலா ஒரு இடங்களையும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கவுன்சிலராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் 25-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் திலகவதி புதுக்கோட்டை நகராட்சி தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதே போல் அறந்தாங்கி நகராட்சி தலைவராக தி.மு.க.வேட்பாளர் ஆனந்த் பதவியேற்றுக்கொண்டார்.
இதே போல் பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக 10-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுந்தரி அழகப்பன் பதவியேற்றுக்கொண்டார்.
கறம்பக்குடி பேரூராட்சி தலைவராக, 8-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் முருகேசன் பதவியேற்றுக் கொண்டார். ஆலங்குடி பேரூராட்சி தலைவராக, 13-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ராசி பதவியேற்றுக் கொண்டார். கீரமங்கலம் பேரூராட்சி தலைவராக, 2&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
இலுப்பூர் பேரூராட்சி தலைவராக, 14-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் சகுந்தலா பதவியேற்றுக் கொண்டார். கீரனூர் பேரூராட்சி தலைவராக, 1-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ஜெயமீரா பதவியேற்றுக் கொண்டார்.
அன்னவாசல் பேரூராட்சி தலைவராக, 1-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர் சாலை பொன்னம்மாள் பதவியேற்றுக் கொண்டார். அரிமளம் பேரூராட்சி தலைவராக, 13&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் மாரிக்கண்ணு பதவியேற்றுக் கொண்டார்.
Next Story






