என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அம்மாபேட்டை பேரூராட்சியில் தாமதமாக வந்த 5 கவுன்சிலர்களை அனுமதிக்காததால் வாக்குவாதம்

    அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர், தி.மு.க. கவுன்சிலர் 3 பேர் என மொத்தம் 5 பேர் தாமதமாக 10.20 மணிக்கு வந்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதில் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை மறைமுக தேர்தலில் பங்கேற்ற 9 கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர், தி.மு.க. கவுன்சிலர் 3 பேர் என மொத்தம் 5 பேர் தாமதமாக 10.20 மணிக்கு வந்தனர். அவர்களை மன்ற கூடத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×