என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் அதிரடி நீக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை யை சேர்ந்த மாவட்ட மீனவர் அணி தலைவர் ஸ்ரீராமன் மற்றும் தேன்கனிக்கோட்டைக்கு உட்பட்ட மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்த மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் ரமேஷ், ஆகிய இருவரும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக மாற்று கட்சியினருக்கு தேர்தல் பணியில் ஈடுபட்ட நிர்வாகிகளை மாநில தலைமை அறிவிப்பின்படி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர் .
இதனால் ஸ்ரீராமன், ரமேஷ் ஆகிய இருவரிடமும் கட்சி நிர்வாகிகள் கட்சி ரீதியாக எந்த தொடர்பில இருக்கவேண்டாம் என்று மாவட்ட தலைவர் நாகராஜ் வௌ¤யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story






